day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

செகந்திராபாத், விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் இரயில் நாளை தொடக்கம் : பிரதமர் மோடி

செகந்திராபாத், விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் இரயில் நாளை தொடக்கம் : பிரதமர் மோடி

விசாகப்பட்டினம்: செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 15-ம் தேதி காணொலி காட்சி வழியாக காலை 10:30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். இந்த சேவை, இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையாகும். தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோமீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரெயில் சேவை இது. இந்த வந்தே பாரத் விரைவு ரெயில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரெயில் நிலையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!