day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சென்னையில் வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை : 300 சாலைகளில் போக்குவரத்தை லைவாக கண்காணிக்கும் கருவிகள்

சென்னையில் வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை : 300 சாலைகளில் போக்குவரத்தை லைவாக கண்காணிக்கும் கருவிகள்

சென்னை: சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த நெரிசலை குறைக்க நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்த உள்ளனர். அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கியமான 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள். இதனால் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும். ஆன்லைன் மூலம் இந்த கருவிகள் வழியாக டேட்பிக்கள் சேகரிக்கப்படும். 5 நிமிடங்களுக்கு ஒருமுறை டேட்பிக்கள் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த டேட்பிக்களை அந்த கருவிகள் சேமித்தும் வைத்துக் கொள்ளும்.

மேலும், இதனால் எந்தெந்த நாட்களில், நேரங்களில், பண்டிகைகளில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து உள்ளது என்பதை போலீசார் அறிந்து முன் கூட்டிேய தகுந்த ஏற்பாடுகளை மேற் கொள்ள முடியும். பொதுமக்களும் தங்கள் மொபைல் போனில் ‘ரோடு ஈசி’ என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள முடியும். இதுவரை 1000 பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்கள். அவசரமாக பயணிக்க வேண்டியவர்கள் நெரிசல் குறைந்த பகுதிகள் வழியாக எளிதாக செல்ல முடியும் போலீசாருக்கும் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் எளிதாக இருக்கும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!