புதுடெல்லி: டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி 74 குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் பாரம்பரியத்தை ப்ரைசாற்றூம் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெற்றது.
இதில் உத்தரா கண்ட் மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த அலங்கார ஊர்தியில் உத்தராகண்ட் மாநிலத்தின் வன விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெற்றிருந்தன. அலங்கார ஊர்தியின் முன் பகுதியில் கார்பட் தேசிய பூங்காவின் கலைமான், கஸ்தூரி மான் இனங்கள், தேசிய பறவை மயில், கோரல் பறவை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. அலங்கார ஊர்தியின் பின் பகுதியில் ஜகேஷ்வர் தாம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பழங்கால கோயில்கள் இடம் பெற்றிருந்தன.
மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகளின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி சிறப்பு பரிசை வென்றது. மத்திய பொதுப் பணித்துறை சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி, ‘வந்தே பாரதம்’ நடனக் குழுவினருக்கு சிறப்பு பரிசு கிடைத்ததுள்ளது.