சென்னை: சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி பாதாள சாக்கடை வசதி இல்லாத புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.866.34 கோடி மணலி, சின்னசேக்காடு, காரம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், இராமாபுரம், மடிப்பாக்கம், நெற்குன்றம், பள்ளிக்கரணை பகுதிகள் மற்றும் அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட் மதனங்குப்பம், ஒரகடம், வெங்கடாபுரம், கள்ளிகுப்பம் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.866.34 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் 59 ஆயிரத்து 446 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 6 லட்சத்து 2 ஆயிரத்து 799 பொதுமக்கள் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.