day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சீர்திருத்தத்தை உடனே மேற்கொள்ளாவிட்டால் ஐ.நா மதிப்பிழக்கும்: இந்தியா

சீர்திருத்தத்தை உடனே மேற்கொள்ளாவிட்டால் ஐ.நா மதிப்பிழக்கும்: இந்தியா

ஐ.நா பாதுகாப்பு அவையில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் மட்டும் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. மற்ற நாடுகளுக்கு இத்தகைய அதிகாரம் இல்லை. சர்வதேச அரசியலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் காரணமாக வீட்டோ அதிகாரத்தைப் பெற பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன. குறிப்பாக இந்தியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் தங்களை ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்ப நாடுகளாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுத்தி வருகின்றன. எனினும், வீட்டோ அதிகாரத்தைப் பெற்றுள்ள நாடுகளின் அணுகுமுறை காரணமாக இதற்கான சீர்திருத்தம் தடைபட்டு வருகிறது.

இந்நிலையில், ஐ.நா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், “ஐ.நா பாதுகாப்பு அவை உடனடியாக சீர்திருத்தப்பட வேண்டும். ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இது நிகழாவிட்டால் ஐ.நா மதிப்பிழக்கும். ஜி20 போன்ற சர்வதேச அமைப்புகள் ஐ.நாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறும்.

ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கக்கூடிய நாடுகளில் சில, தங்களுக்கு இருக்கும் வீட்டோ அதிகாரம் வேறு யாருக்கும் இருக்கக் கூடாது என எண்ணுகின்றன. எனவே, சீர்திருத்தம் ஏற்படுவதை அவை விரும்பவில்லை. அதன் காரணமாகவே இந்த விவகாரம் சிக்கல் நிறைந்ததாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!