உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும், பாலியல் புகார்கள் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க உயர்மட்ட கமிட்டி உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும், அதில் தாமதம் கூடாது என்றும், தனி கமிட்டியின் விவரங்களை யுஜிசி-யிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இதுபோன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை என்று யுஜிசி-க்கு புகார் வந்ததன் அடிப்படையில் தற்போது மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.