தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, குரூப் 1 தேர்வுக்கு ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் இன்று (ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி) வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். வரும் அக்டோபர் 30ஆம் தேதி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும். முதன்மைத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி குறிப்பிடப்பட்டுள்ளது.