இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 ஆயிரத்து 038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 10 ஆயிரத்து 024 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 073 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் நேற்று மட்டும் 47 பேர் மரணடைந்துள்ளனர். இதனையடுத்து, இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 604 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 994 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவில் இருந்துமீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 45 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது.