இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அந்த விவரங்களின் படி, நேற்று 9 ஆயிரத்து 923 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 12 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 33 லட்சத்து 31 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரம் வரை இந்தியா முழுவதும் 81 ஆயிரத்து 687 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 9 ஆயிரத்து 862 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனைத்தொடர்ந்து, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 25 ஆயிரத்து 055 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 13 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.