தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுக்கு இன்று (ஜூலை மாதம் 21ஆம் தேதி) முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். வரும் அக்டோபர் 30ஆம் தேதி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும். முதன்மைத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.