ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, மீனவர்கள் ஏழு பேரும் இன்று யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.