சென்னை: திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாற்காலிகளை எடுத்து வர கட்சித் தொண்டர்களிடம் கூறினார். கட்சி நிர்வாகிகள் அதிகமானவர்கள் இருந்த நிலையில் ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டது. நாற்காலி எடுத்து வர தாமதமானதால் கோபத்தில் அமைச்சர் நாசர், தொண்டர் மீது கல்வீசியது வீடியோவாக வெளியானதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.