day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி-போடிநாயக்கனூர் இடையே அதிவேக ரெயில் இன்ஜின் சோதனை

12 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி-போடிநாயக்கனூர் இடையே அதிவேக ரெயில் இன்ஜின் சோதனை

தேனி, மதுரை-போடிநாயக்கனூர் இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த 2010-ம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக நடைபெற்று . இதில் கடந்த மே மாதம் 26-ந் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான சேவை தொடங்கப்பட்டது.

இந்த பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி வரும் நிலையில் இன்று இருப்புப் பாதை ஆய்வு செய்வதற்காக தேனியில் இருந்து போடி வரையிலான அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடி ரெயில் நிலையத்தில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றதால், அப்பகுதி மக்கள் ரெயில் இன்ஜினுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி வரவேற்றனர். பின்னர் 120 கி.மீ. வேகத்தில் புழுதி பறக்க இன்ஜின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனை முன்னிட்டு ரெயில்வே போலீசார் மற்றும் தேனி மாவட்ட போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!