டெல்லி : கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகள் மோதியதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். கல்வான் மோதலில் வீரமரணமடைந்த வீரர்களில் தீபக் சிங். இவரது மனைவி ரேகா சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு ராணுவ அதிகாரியாக கிழக்கு லடாக்கில் பணியமர்த்தப்பட்டுள்ளார். ராணுவ வீரரான தனது கணவர் தீபக் சிங் வீரமரணமடைந்த நிலையில் அவரது மனைவி ரேகா ராணுவ அதிகாரியாக தேர்வாகியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.