கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ராஜராஜன் இந்துவா என்ற இயக்குனர் வெற்றிமாறனின் கருத்துக்கு நடிகர் கமலஹாசன் ஆதரவு அளிக்கும் வகையில் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, “தஞ்சை பெரிய கோயிலை பார்த்து வளர்ந்தவள் நான். அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாச்சார அடையாளங்களை மறைப்பதை எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் ஏற்று கொள்ள முடியாது. தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம். அடையாளத்தினை மறைக்க முற்படுகின்றனர். அடையாளங்களை மறைக்க முற்பட்டால் அது சரியாக இருக்காது” என அவர் பதிலளித்தார்.