day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஏகே-47-ஐ பிரோவில் வைத்து சென்ற காவலர்கள்

ஏகே-47-ஐ பிரோவில் வைத்து சென்ற காவலர்கள்

ஜார்கண்ட் மாநில முதலமைச்சரும் ஹேமந்த் சோரனின் நெருங்கியவரும், உதவியாளருமான பிரேம் பிரகாஷின் வீட்டில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 24ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பீரோவில் இருந்த இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டாக்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, துப்பாக்கிகள் ராஞ்சியைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு பாதுகாப்பு பணியின் போது வழங்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பணி முடிந்து வீடு திரும்பும்போது பிரேம் பிரகாஷின் வீட்டில் துப்பாக்கிக்களை காவலர்கள் வைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து பணியின்போது கவனக்குறைவாக இருந்த காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!