day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

குதிரை எட்டி உதைத்ததால் சிறுவன் பலி

குதிரை எட்டி உதைத்ததால் சிறுவன் பலி

சென்னை அடுத்த பல்லாவரம், சங்கர் நகர், பம்மல் பகுதியில் வசித்து வரும் கால் டாக்சி ஓட்டுநரான டில்லி ராஜின் (39), 4 வயது மகன் கெளதம் (4), வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மேய்ச்சலில் இருந்த குதிரை ஒன்று குழந்தையின் மார்பில் எட்டி உதைத்துள்ளது. இதனால், வலியால் துடித்த சிறுவன் கெளதமை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குதிரை எட்டி உதைத்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!