day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மொட்டை மாடி பார் வழக்கு – மனுதாரை எச்சரித்த நீதிபதிகள்

மொட்டை மாடி பார் வழக்கு – மனுதாரை எச்சரித்த நீதிபதிகள்

தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை விடுத்து அனுமதியில்லாத பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சென்னை பாடியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், சென்னை அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் உள்ள மொட்டைமாடி பார் விருந்தின் போது ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற மொட்டை மாடி பார்களில் மதுபானங்கள் தவிர போதைப் பொருட்களும் பயன்படுத்தப்படுவதாகவும், ஹூக்காக்கள் உபயோகிக்கப்படுவதாகவும், அதன் காரணமாக தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி, மனுதாரருக்கு அபராதம் விதிக்கப் போவதாக எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!