தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு, மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர்வதற்கான, முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட் மாதம் 25 முதல் 31 வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாளுக்கு, தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக இந்த தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோரிடம் ஏப்ரல் மாதம் 26 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பத்தில் உள்ள விபரங்களில் தவறுகள் உள்ளதாகவும், அவற்றை திருத்தம் செய்ய அவகாசம் தேவை என்றும் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்து, விண்ணப்ப விபரங்களை ஆன்லைனில் திருத்தும் செய்ய கடந்த 24ஆம் தேதி முதல் அளிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிகிறது.