தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 85. சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் கூறினார். அவ்வை நடராஜன் 1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு எனும் ஊரில் பிறந்தார். தமிழறிஞர் அவ்வை நடராஜன் 1992 முதல் 1995 வரை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு வகித்தார். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், அவ்வை நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.