பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள் உள்ளிட்டோருடன் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் இணைந்து வரும் 15ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்தல், விலையில்லா சீருடை விநியோகம், எண்ணும் எழுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கான அங்கீகாரம், கட்டட இடிப்பு, துணைத்தேர்வு, சிறப்பு ஊக்கத்தொகை, இல்லம் தேடிக்கல்வி திட்டம் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.