சென்னை : தமிழகத்தில் கோடை வெப்பம் தனிந்து வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூரில் வரும் 30ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்னிந்திய பகுதிகளுக்கு மேல் உள்ள வளிமண்டல பகுதிகளில் உள்ள கிழடுக்குகளில் கிழக்கு விசைக் காற்றும் மேற்கு திசைக் காற்றும் சந்திக்கின்ற பகுதி நிலவுவதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யகூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.