day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

“இந்தியாவில் சிறுபான்மையினர் தனிமனித உரிமைப் பாதுகாப்போடு வாழும் முன்னணி மாநிலம் தமிழகம்” – முதல்வர் ஸ்டாலின்

“இந்தியாவில் சிறுபான்மையினர் தனிமனித உரிமைப் பாதுகாப்போடு வாழும் முன்னணி மாநிலம் தமிழகம்” – முதல்வர் ஸ்டாலின்

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளையொட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் “தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளினை” 18-12-2022 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் மிகச் சிறப்பாக நடத்துவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்மொழிக்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும், தமிழர்களுக்கும், திராவிடப் பண்பாட்டுக்கும் அவர்கள் ஆற்றியுள்ள தொண்டுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். மதம், சாதி ஆகிய எல்லைகளைக் கடந்து தமிழகத்தில் வாழும் அனைவரும் தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ்ச் சமூகமாக எழுந்து நிற்கவேண்டும் என்பதே நமது “திராவிட மாடல்” ஆட்சியின் உயரிய நோக்கம்.

இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படாமல் தனிமனித உரிமைகளுக்கான பாதுகாப்போடு வாழ்கின்ற முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பது நமக்கிருக்கும் சிறப்பான பெருமை ஆகும்.

தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்ற நானும், நமது அரசும் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து ஒத்துழைப்பினையும் நல்கவேண்டும் என வேண்டுகிறேன். நமது ஒப்பற்ற தலைவர் கருணாநிதி மீதும் என் மீதும் சிறுபான்மைச் சமூகங்களின் மக்கள் கொண்டுள்ள அன்புக்கும், பாசத்திற்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். விழா சிறக்க எனது நல்வாழ்த்துகள்” என்று அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!