day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வு பற்றி பேச்சு : பிரதமர் மோடி

சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வு பற்றி பேச்சு : பிரதமர் மோடி

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகளில், சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வு என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: “நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பினை கோவிட் பொதுமுடக்கத்திற்கு முன், பொது முடக்கத்திற்குப் பின் என இரண்டு விதமாக நாம் பார்க்கலாம்.

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் நோயாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வரை சேமிக்க வழிவகை செய்துள்ளது. கூடுதலாக, ஜன் அவுஷாதி கேந்திரங்கள் மூலமாக நோயாளிகள் ஜெனரிக் மருந்துகள் வாங்கியதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வரை சேமிப்பு எட்டப்பட்டுள்ளது. அதேபோல், பிஎம் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்ஃப்ராஸ்டெக்சர் (PM-ABHIM) திட்டம் சுகாதார உள்கட்டமைப்பு வசதியை நாட்டின் அடிமட்டம் வரைக்கும் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக 260 புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு முதல் இளநிலை மற்றும் முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளன. செவிலியர் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அவைகளில் 357, மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகில் உருவாக்கப்பட இருக்கின்றன. இ – சஞ்சீவினி தொலைவழி கன்சல்டேஷன் மூலமாக தொலைதூரங்களில் உள்ள 10 கோடி நோயாளிகள் வரை பயனடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!