day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ராஜஸ்தானில் அமலான சுகாதார உரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு : தனியார் மருத்துவர்கள் போராட்டம்

ராஜஸ்தானில் அமலான சுகாதார உரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு : தனியார் மருத்துவர்கள் போராட்டம்

புதுடெல்லி : நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ‘சுகாதார உரிமை சட்டம்’ காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அமலாகி உள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறிமுகமானது. இது கடந்த மார்ச் 21-ல் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமானது.
இந்த சட்டத்தின்படி, விபத்துகளில் படுகாயம் அடைந்தும் அல்லது பிற பாதிப்புகளுக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். முன்தொகை, சிகிச்சைக்கான தொகை, மருந்துகளுக்கான தொகை என எதையும் பெறக்கூடாது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும்.

இந்த சட்டத்திற்கு தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த சட்டம் அமலானது முதல் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையை நிறுத்திவைத்து போராடி வருகின்றனர். கடந்த 4 நாட்களாக இவர்களின் போராட்டத்தால் ராஜஸ்தான் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இலவச அவசர சிகிச்சைக்கான தொகையை மாநில அரசே அளிக்கவும் முன் வந்துள்ளது. எனினும் புதிய சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது. “தனியார் மருத்துவமனைகள் தொடங்க அரசிடம் இருந்து 54 வகை உரிமங்கள் பெற வேண்டி உள்ளது. இதன் பிறகும் புதிய சட்டம் தேவையா?” என தனியார் மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்தப் பிரச்சினையில் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக நடுநிலை வகிக்கிறது. நேரடியாக புதிய சட்டத்தை எதிர்க்காமல் போராடும் மருத்துவர்களை அழைத்துப் பேச வேண்டும் எனக் கூறி வருகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!