தஞ்சாவூர்: தஞ்சையில் இன்று முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது: மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும் . பள்ளிகளில் மாணவ-மாணவிகளை படிப்பை தவிர பள்ளியை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வேறு எந்த வேலையிலும் ஈடுபடுத்த கூடாது அதனையும் மீறி ஈடுபடுத்தினால் சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொது தேர்வில் மாணவர்களின் ஆப்சென்ட் விகிதம் மிக குறைவாக தான் இருக்கும். அனைத்து மாணவர்களும் விடுபடாமல் பொது தேர்வு எழுத வேண்டும் ,தேர்ச்சி வீதமும் கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.