day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

டிஆர்எஸ் கட்சியினர் வினோத செயல் இணையத்தில் வைரல்

டிஆர்எஸ் கட்சியினர் வினோத செயல் இணையத்தில் வைரல்

தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராட்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சந்திரசேகர ராவ் பாரத் ராட்டிர சமிதி என்ற பெயரில் தேசிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாகவும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் அவரே அறிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, சந்திரசேகரராவின் தேசிய கட்சி தொடங்குவது குறித்த முன்னெடுப்பை கொண்டாடும் விதமாக அவரின் தொண்டர் ஒரு வினோத வேலையை செய்துள்ளார். அதுதொடர்பாக வெளியான வீடியோவில், வாரங்கல் நகரில் 200 தொழிலாளர்களை வரிசையில் வரவழைத்து, மது பாட்டில்கள், உயிருடன் கோழி ஆகியவற்றை டிஆர்எஸ் நிர்வாகி ராஜநல்லா ஸ்ரீஹரி வழங்கியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
#telengana

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!