day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கலாஷேத்ரா விவகாரத்தில் மாணவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த திட்டம் : மாநில மனித உரிமைகள் ஆணையம்

கலாஷேத்ரா விவகாரத்தில் மாணவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த திட்டம் : மாநில மனித உரிமைகள் ஆணையம்

சென்னை : கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி 6 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய 4 அதிகாரிகள் இன்று நேரில் சென்று கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரி மாணவ, மாணவிகளிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!