day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களில் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என அந்த நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்தனர். இதனையடுத்து, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொருவராக பதவி விலக கடைசி நபராக அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து இடைக்கால அதிபராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று (ஜூலை மாதம் 15ஆம் தேதி) பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, இன்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. ரணில் அதிபராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் கூட்டத்தில் பங்கேற்க எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அடுத்த வாரம் புதிய அதிபரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறவுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!