15ஆவது ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்றிரவு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடந்த 5ஆவது லீக் போட்டியில் பி பிரிவு அணிகளாக இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியையடுத்து, சூப்பர் சுற்றுக்கு முன்னேறியது இலங்கை அணி.