தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதில்,
அக்டோபர் 20ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், மறுமார்க்கத்தில் 21ஆம் தேதி தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அக்டோபர் 22ஆம் தேதி செகந்திராபாத்தில் இருந்து சென்னை வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அக்டோபர் 20 முதல் நவம்பர் 29 ஹைதராபாத் – தாம்பரம் தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அக்டோபர் 20 முதல் நவம்பர் 29 வரை ஹைதராபாத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.