தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி, சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 10,518 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில், வழக்கம்போல் தினசரி இயக்கப்பட கூடிய 2,100 வெளியூர் பேருந்துகளுடன், கூடுதலாக 4,218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக சென்னையில், மாதவரம், கே.கே நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக, பிரத்யேக பேருந்து முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.