பூமியின் வளிமண்டலத்தை சக்திவாய்ந்த சூரிய புயல் தாக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் இன்று வீரியமிக்க சூரிய புயல் ஒன்று பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், செயற்கைக்கோள்கள் செயல்பாடுகள் பாதிக்கும் என்பதால் ஜிபிஎஸ் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் பல இடங்களில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.