day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வரும் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் – அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் திட்டவட்டம்

வரும் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் – அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் திட்டவட்டம்

அதிமுகவின் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ”42 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் மன்றத்தின் மாவட்ட செயலாளராகவும், 62 ஆண்டுகள் பொது சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன். அதிமுகவை நல்ல முறையில், ஒருங்கிணைத்து கொண்டு செல்வேன். தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் ஒற்றை தலைமையை தான் விரும்பிகிறார்கள். எடப்பாடி தான் ஒற்றை தலைமையாக வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஜூலை 11ஆம் தேதி அந்த நல்ல செய்தியை அனைவரும் கேட்க போகிறார்கள் என்றும், மீண்டும் அதிமுக ஆட்சியை சென் ஜார்ஜ் கோட்டையில் அமைக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். செம்மையாக, ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெறுவோம் என அவர் தெரிவித்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!