day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இன்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடை நாள் : மின்வாரியம் அறிவிப்பு

இன்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடை நாள் : மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31-ஆம் தேதி எனக் கூறப்பட்ட நிலையில், ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28 இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. இதற்குமேல் அவகாசம் வழங்கப்படாது என்று மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் மின் – ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது. https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhmtl என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!