சென்னை: வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கட்டுள்ளது.