சென்னை: ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்களை தடுக்கவும் ரயில் நிலையங்கள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்பொருத்தி கண்காணிக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 518 எல்.எச்.பி பெட்டிகள், 144 மெமு பெட்டிகள், 81 மின்சார ரயில் பெட்டிகள், 16 வந்தே பாரத் பெட்டிகள் என 759 பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.படிப்படியாக மற்ற ரயில் பெட்டிகளிலும் கேமராக்கள் பொருத்த உள்ளோம். மேலும், ரயில் பெட்டிகளில் நுழைவு பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்த திட்டமிட்டு உள்ளோம் என்று கூறியுள்ளார்.