தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் வரும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியிருப்பதாவது :- மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள சில்லரை மற்றும் மொத்த மருந்து கடைகளில் தொடர்ச்சியாக மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளால் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த சோதனைகளின்போது சென்னை, பெருங்குடி திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகளை பெருமளவில் வாங்கி டாக்டரின் பரிந்துரைசீட்டு, விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லரை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்க டாக்டரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்யவேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகின்றனர்