புதுடெல்லி: இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி 20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க ஜி 20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில், சீன , ரஷியா, அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு மந்திரிகள பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் நேற்று நள்ளிரவு தலைநகர் டெல்லி வந்தடைந்தநிலையில், அதிகாரிகள் பலரும் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.