day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் பங்கு இந்திய விடுதலையில் முக்கியமானது : தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

தமிழர்களின் பங்கு இந்திய விடுதலையில் முக்கியமானது : தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: தமிழ் புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழரின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக தமிழ் புத்தாண்டு விழாவில் பட்டு வேஷ்டி, சட்டையில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:- அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் உத்திரமேரூரில் 1100-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றிய பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன… உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகின்றனர்.

சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலமில் இருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைத் தம்முடன் சுமந்து சென்ற தமிழ் மக்களைக் காணலாம். பலமுறை பல சாதனை செய்த தமிழர்கள் பற்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி உள்ளேன். தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்குச் சின்னச் சின்னப் படைப்புகளை வழங்கி உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிட்டேன் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!