நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோயால் ஏற்பட்ட உபத்தொற்றின் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார். ஆனால், அவரின் மரணம் குறித்து பல்வேறு காரணங்கள் சமூக வலைதங்களில் பரப்பப்பட்டன. இந்த நிலையில், கணவரின் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வித்யாசாகர் இறப்பால், மிகுந்த கவலையில் இருப்பதாகவும், தங்களது தனி உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மீனா குறிப்பிட்டுள்ளார்.