சில்லரை பயன்பாட்டிற்காக டிஜிட்டல் கரன்சியை நாளை அறிமுகம் செய்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.முதற்கட்டமாக மும்பை,டெல்லி, பெங்களூரு,புவ்னேஷ்வரம் ஆகிய 4 நகரங்களில்,தற்போது சில்லறை பரிவர்த்தனைக்காகவும்,நவம்பர் 1-தேதி முதல் மொத்த பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது. கரன்சி டிஜிட்டல் வடிலும்,தனிப்பட்ட எண்களுடன் இருக்கும். இது இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்படுவதால், மக்கள் அச்சமின்றிப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அகமதாபாத், கவுஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா, சிம்லா, கங்டக் ஆகிய நகரங்களுக்கும், பரோடா வங்கி, இந்திய யூனியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றுக்கும் டிஜிட்டல் கரன்சி விரிவுபடுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது சோதனை முயற்சி என்பதால், குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையே பரிவர்த்தனை நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டுக்கு வருவதால், காகிதரூபாயை அச்சிடுதல், நிர்வகித்தல் செலவு குறையும். டிஜிட்டல் கரன்சியை செல்போன் செயலி வழியாகப் பயன்படுத்த முடியும். ஆஃப்லைனிலும் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.நாட்டின் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு டிஜிட்டல் கரன்சி உந்துசக்தியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.