சென்னை: தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி குறித்து தமிழக சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது: காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீத பேருக்கு influenza வைரஸ் பாதிப்பு உள்ளது. இது உயிர்க்கொல்லி வைரஸ் அல்ல, மக்கள் அச்சப்பட வேண்டாம்.காய்ச்சல் இருந்தால் சொந்தமாக மருந்து எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும். கோடையில் குறைய தொடங்கும் காய்ச்சல் பாதிப்புகள், நடப்பாண்டில் மார்ச் மாதம் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.