சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வா்நாத் பண்டாரி செப்டம்பர் 12ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக செப்டம்பர் 13ஆம் தேதி துரைசாமி பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், நீதிபதி துரைசாமியின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் (செப்டம்பர் 21ஆம் தேதி) முடிவடையவுள்ளதால், பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜா-வை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான இவர், செப்டம்பர் 22ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.