சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியை பொறுத்தவரையில் 15 ஆயிரத்து 566 பேரும், தனித் தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் இந்த தேர்வை ஆர்வமுடன் எழுதினார்கள்.
இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்த பள்ளிக்கல்வித்துறை கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என அறிவித்துள்ளது. மேலும், 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21ம் தேதிக்குள் ஆண்டு இறுதித்தேர்வை முடிக்க வேண்டும் எனவும்,4 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 முதல் 28ம் தேதிக்குள் இறுதித்தேர்வை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.