லெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியது. அதிக நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் சுமார் 30 நொடிகள் நீடித்தது. பராபரமுவிலிருந்து வடமேற்கே 50 கிமீ தொலைவில் இதன் மையம் இருந்துள்ளது, 48 கிமீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்துள்ளது.
சுமார் 60,000 மக்கள் இந்த நில அதிர்வை உணர்ந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை” என்று ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.