எழுத்தாளர் கல்கி, மாமன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்றை மையமாக கொண்டு எழுதிய வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்தினம் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை லைக்கா நிறுவனத்தினர் தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நேற்று பாடல்கள் மற்றும் கமல்ஹாசன் குரலில் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தட்டு தொழில்நுட்ப கலைஞர்களுடன், நடிகர் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரகுமான், விக்ரம்பிரபு, அஷ்வின், மலையாள நடிகர் லால், பார்த்திபன் என நீண்டுகொண்டே போகும் நடிகர் பட்டாளமும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த படத்தில் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்களுடன் பல முன்னணி நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். செப்டம்பர் 30ஆம் தேதி திரைப்பட வெளியிடதிட்டமிடப்பட்டுள்ளது.