சென்னை: பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தேர்வர்கள் 23 ஆயிரத்து 747 பேரும் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவுடைகின்றது.
மேலும், விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 10-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வெளியிடப்பட இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை மறுதினம் முடிவடைய உள்ளது.