day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து ஆலோசனை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து ஆலோசனை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்துவது உண்டு. ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் குற்றச் செயல்கள், ரவுடிகள் அட்டகாசம், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது முதல்வர் பேசியதாவது: குற்றம்புரிபவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவ இடங்களுக்கு விரைந்து நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். சோதனை சாவடிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!