சென்னை: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரூ.1000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ரேசன் கடைகளில் 5 நாட்களாக கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வழங்கப்பட்டது. 92 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை அன்று மூடப்பட்ட ரேசன் கடைகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன.
இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில் : பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.